முடிவில்லாத தமிழ் நாகரிகம்

தமிழன் தெரிந்து கொள்ள வேண்டியவை தமிழினத்தின் பெருமை. அதை உலகிற்கு உரக்கச் சொல்ல வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமை.
தமிழ் இலக்கியங்களில் சில 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கி.மு 300 ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்தால் எழுதப் பெற்றவைகளாகும். இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 1,00,000 கல்வெட்டு, தொல் எழுத்துப் பதிவுகளில் 55,000 க்கும் அதிகமானவை தமிழில் உள்ளன. பண்டைய புதை நகரங்கள் பல உலகிற்கு வெளிக்கொணரப்படவில்லை.
இந்த உலகம் எப்படி இருக்கிறது? தொல்காப்பியர் சொல்கிறார். நிலம், நீர், தீ, வளி, விசும்பு இந்த 5 ம் கலந்த முயக்கம் தான் உலகம் என்று தெளிவாகக் கூறினார்.
நமது நாகரிகம் உலகம் முழுவதும் பரந்திருந்த நாகரிகமாகும். பசுபிக் கிழகிந்திய தீவுகள் தொடக்கம் மேற்கே அமெரிக்கா வரையும் மத்திய ரேகைக்கு இருமருங்கிலும் தொடர்ச்சியாக பரந்து கிடந்த நாடுகளிற் பண்டைக் காலத்திலேயே நிலவிய நாகரிகம் இதுவாகும். இந்நாடுகளிற் சில உதாரனமாக அத்திலாத்தியகம் இலேமூரியாவும் கடற்கோளினால் அழிந்து விட்டன. பல நாடுகளில் வடபுல மக்களின் படையெழுச்சியினால் இந்நாகரிகம் அழிக்கப்பட்டு விட்டது.
பண்டைய எகிப்தியரும் திராவிடமும் ஒரின மக்கள் எனவும் மிக பழைய காலத்திலேயே இம்மக்கள் இந்தியாவிலிருந்து ஸ்பெயின் வரையும் பரவியிருந்தனர் எனவும் பேராசிரியர் கச்சிலி கூறுகிறார்.
தலைச் சங்க காலமும், இடைச்சங்க காலமும் புதுக்கற்காலமாகும். இதனை தொல்காப்பியம் விவரித்து உள்ளது.
“உலக மொழிகளில் மூத்த மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும்”. என்று மொழியியல் அறிஞர் நோவோம் சோம்சுகியறிவித்துள்ளார்.
மேலும் பல அறிஞர்கள் இக் கருத்தை வழி மொழிந்துள்ளனர்.
வானியல் அறிவினைத் தமிழ் மக்கள்தாம் முத முதலில் பெற்றிருந்தனர். மேலும் இவர்களின் மூலமாகவே உலகின் மற்ற பகுதிகளுக்கு இந்த அறிவு பகிரப்பட்டது. இதற்கான ஆதாரங்கள் அனைத்தும் படையெடுப்புகளால் அழிக்கப்பட்டன மற்றும் இன்னும் இவையெல்லாம் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே நிசப்தமான உண்மை.
தற்காலத்து வானியல் அறிஞர் கூறும் அனைத்தும் அக்காலத்திலேயே தமிழக அறிஞர்களால் இலக்கியங்கள் பதிவு செய்யப்பட்டுவிட்டன. அவற்றை ஆய்வு செய்து வெளிக்கொணர வேண்டியது நம் தலையாக கடைமைகளில் ஒன்றாகும்.
தற்போது தமிழை பேசக்கூடகூச்சப்படும் தமிழர்கள் உள்ளனர். மேலும் இவர்கள் தமிழ் இலக்கியங்களை கடவுளோடு பொருத்திப் பார்த்து மூட நம்பிக்கைகளையே வளர்த்துக் கொண்டுள்ளனர்.
தொல்காப்பியமும், திருக்குறளும் படைக்கப்பட்ட இடத்தில் நாம் வழித்தோன்றலகளாக வந்துள்ளோம் என்பது நமக்கு பெருமை. இவற்றை நாம் எப்போதுமே அறிவியலோடும் தொலில்நுட்பத்தோடும் பொருத்திப் பார்க்க வேண்டும். அப்போதுதான் உண்மை புலனாகும்.
இன்னும் கணக்கற்ற படைப்புகள் கண்டுபிடிக்கப் பட வில்லை என்ற சோகம் இருந்தாலும் நிச்சயமாக இந்த நாகரிகம் இன்னும் இலட்சக்கணக்காண ஆண்டுகள் உயிர் வாழ்ந்து முடிவில்லாத நாகரிகமாக சரித்திரத்தில் இடம் பெரும் என்பது உண்மை.
இவண்
நம்ம ஊரு சைன்டிஸ்ட்
வினைஞன் கல்வி நிறுவனம்

Comments

Popular posts from this blog

பழந்தமிழர் வான் ஆராய்ச்சி

நான் ஏன் சராசரி ?